உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

மார்த்தாண்டத்தில் விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

Published On 2022-12-21 13:39 IST   |   Update On 2022-12-21 13:39:00 IST
  • தீராத வயிற்று வலி இருந்து வந்ததால், மன வருத்தத்தில் எலி மருந்தை தின்றதாக கூறியுள்ளார்.
  • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட வடக்கு தெரு மேல குளத்தைச் சேர்ந்தவர் பாபு.

இவரது 2-வது மகள் அபிஷா (வயது 19). இவர் இரவு வீட்டின் அறையில் தூங்கினார். இன்று காலை யில் அவர் வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டு குடும்பத்தினர் சென்று பார்த்தனர்.

அப்போது அவர் தீராத வயிற்று வலி இருந்து வந்ததால், மன வருத்தத்தில் எலி மருந்தை தின்றதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அபிஷா பரிதாப மாக இறந்தார்.

இதுகுறித்து மார்த்தாண் டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News