உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

கன்னியாகுமரியில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-02-10 08:08 GMT   |   Update On 2023-02-10 08:08 GMT
  • திருமணமான 2½ ஆண்டுகளில் பரிதாபம்
  • நாகர்கோவில் ஆர்.டி.ஓ. விசாரணை

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே ஒற்றையால்விளை அம்பலபதி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்.

இவரது மனைவி மேரி சுருதி (வயது 26). இவர்களுக்கு கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.பிரகாஷ் வெளிநாட்டில் தங்கி மீன்பிடித் தொழில் செய்து வந்தார். கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பிரகாஷ் கடந்த 5-ந்தேதி ஊருக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று கணவன்-மனைவிகளிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்த மேரி சுருதி அறையில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த பிரகாஷ் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கன்னியா குமரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய மேரி சுருதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களுக்கு திருமண மாகி 2½ ஆண்டுகளே ஆவதால் நாகர்கோவில் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொண்டு வருகிறார். தற்கொலை செய்து கொண்ட மேரி சுருதியின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது.

திருமணமான 2½ ஆண்டு களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News