உள்ளூர் செய்திகள்

தீ வைத்து எரிக்கப்பட்ட டெம்போவை படத்தில் காணலாம் 

இரணியல் அருகே டெம்போவுக்கு தீ வைப்பு

Published On 2023-01-07 07:33 GMT   |   Update On 2023-01-07 07:33 GMT
  • இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
  • விசாரணையில் டெம்போவை தீ வைத்து எரித்த வாலிபர் கைது

கன்னியாகுமரி:

இரணியல் அருகே வில்லுக்குறியை அடுத்த குழுமைகாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெம்போ ஒன்று எரிந்த நிலையில் கிடந்துள்ளது.இதுபற்றி அப்பகுதி மக்கள் இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர்.

இதில் நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் டெம்போவின் முன்பக்க கண்ணாடியை அடித்து உடைத்து தீ வைத்து எரித்து இருந்தது தெரியவந்தது .இது குறித்து தனிப்பிரிவு எஸ். ஐ. சிவசங்கர் தனிப்பிரிவு ஏட்டு சுஜி ஆகியோர் மர்ம நபரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வில்லுக்குறி பகுதியில் நடந்து சென்ற வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்.

அப்பொழுது குழுமைக்காடு பகுதியில் நிறுத்தி இருந்த டெம்போவை தீ வைத்து எரித்த நபர் அவர்தான் என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவரை கைது செய்து இரணியல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு நடந்த விசாரணையில் தீ வைத்து எரித்த வாலிபர் ராஜேஷ் (வயது 27) என்பதும் அவர் சற்று உடல்நலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இது குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News