உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் 30-ந் தேதி சிறப்பு கிராமசபைக் கூட்டம்
- 30-ந் தேதி தொழுநோய் ஒழிப்புதினம் கடைபிடிக்கப்படுகிறது.
- குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொழுநோய் ஒழிப்புதினமான 30-ந் தேதி அன்று பகல் 11 மணிக்கு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
எனவே, பொதுமக்கள் சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி களில் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.