உள்ளூர் செய்திகள் (District)
இரணியல் அருகே அரசு அனுமதி இன்றி மண் கடத்திய டெம்போ பறிமுதல்
- நாகர்கோவில் புவியியல் மற்றும் சுங்கத்துறை தனிப்படையினர் வாகன தணிக்கை
- இரணியல் போலீஸ் விசாரணை
கன்னியாகுமரி:
நாகர்கோவில் புவியியல் மற்றும் சுங்கத்துறை உதவி இயக்குனர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படையினர் நேற்று காலை தோட்டியோடு சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த னர். அப்போது அந்த வழியாக வந்த டெம்போவை நிறுத்தியபோது டெம்போ டிரைவர் டெம்போவை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
டெம்போவை தனிப்படை போலீசார் சோதனை செய்தபோது, அதில் அரசு அனுமதி இன்றி எம்சாண்ட் மணல் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. டெம்போவுடன் அவற்றை பறிமுதல் செய்து இரணியல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.