உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

திருவட்டார் அருகே வீட்டின் மதில் சுவரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

Published On 2023-02-07 13:03 IST   |   Update On 2023-02-07 13:03:00 IST
  • திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை
  • நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி:

திருவட்டார் அருகே உள்ள விராலிகாட்டு விளை, மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் தங்கதாஸ் (வயது 78), தொழிலாளி.

இவருக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். சம்பவத்தன்று தங்கதாஸ் இரவு சாப்பிட்டுவிட்டு வீட்டின் மதில்சுவர் மீது உட்கார்ந்து இருந்தார். அப்போது அவர் திடீரென நிலை தடுமாறினார்.

உடனடியாக சுவரில் இருந்து இறங்க முயன்றார். ஆனால் அதற்கு பலன் கிடைக்க வில்லை. இதனால் தங்கதாஸ், பக்கத்து வீட்டின் காம்பவுண்டிற்குள் விழுந்தார். இதில் அவரது தலையின் பின் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதற்கிடையில் தங்க தாசின் அலறல் சத்தம் கேட்டு அவரது மகன்கள் சுனில், பிரேம்குமார் ஓடி வந்தனர். அவர்கள் படுகாயத்துடன் கிடந்த தந்தையை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக தங்கதாசை நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த னர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

அவரது மகன் பிரேம் குமார் புகாரின் பேரில் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News