உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

Published On 2022-12-03 08:39 GMT   |   Update On 2022-12-03 08:39 GMT
  • தலைமறைவாக இருந்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
  • நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை

நாகர்கோவில்:

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சித்திரபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 12 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வருகிறார். அவரை ராஜபாளையத்தைச் சேர்ந்த அஜித் கிளிண்டன் (வயது 25) என்பவர் ஏமாற்றி நாகர்கோ விலுக்கு அழைத்து வந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அந்தப் பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறை வாக இருந்து வந்த அஜித் கிளிண்டனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அஜித் கிளிண்டன் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டார்

Tags:    

Similar News