கள்ளக்குறிச்சி மாவட்ட பெண்களுக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் ஷ்ரவன் குமார் தகவல்
- ஏ.கே.டி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காலை 9.00 மணியளவில்ந டைபெறுகிறது.
- பட்டப்படிப்பு பயில்வதற்கான வாய்ப்புகளும், நிரந்தர பணி நியமனமும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவ ட்டத்தில் தமிழ்நாடு ஊரக, நகர்ப்புற வாழ்வாதா ரஇயக்கம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும்டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் பெண்களுக்கான சிறப்புத னியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றனர். முகாம் வருகின்ற 22.10.2022 அன்று ஏ.கே.டி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காலை 9.00 மணியளவில்ந டைபெறுகிறது. இதில் 2020, 2021 மற்றும் 2022-ம்கல்வியாண்டில் 12-ம் வகுப்பு தேர்ச்சிபெற்று, 18 முதல் 20 வயதுடைய விண்ணப்பதாரர்கள் பங்கேற்கலாம்.
அவ்வாறு தேர்வு செய்யப்படும் பெண்வி ண்ணப்பதாரர்களுக்கு 12 நாட்கள் பயிற்சியும், மாத சம்பளமாக ரூ.16,557-ம்,உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதி, பட்டப்படிப்பு பயில்வதற்கான வாய்ப்புகளும், நிரந்தர பணி நியமனமும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படும். எனது கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இதில் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார்தெரிவித்து ள்ளார்.