உள்ளூர் செய்திகள்
கிராமசபை கூட்டம் நடைபெற்ற காட்சி.

கடையத்தை தனி தாலுகாவாக மாற்ற வேண்டும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

Published On 2022-08-22 09:23 GMT   |   Update On 2022-08-22 09:23 GMT
  • கடையம் யூனியனுக்குட்பட்ட கீழக்கடையத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் தலைமை தாங்கினார்.
  • கடையத்தை தனி தாலுகாவாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , மேலும் கீழக்கடையம் ஊராட்சியில் கூடுதலாக தூய்மைப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கடையம்:

கடையம் யூனியனுக்குட்பட்ட கீழக்கடையத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், ஆதிதிராவிட ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் , கடையத்தை தனி தாலுகாவாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , மேலும் கீழக்கடையம் ஊராட்சியில் கூடுதலாக தூய்மைப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் துணைத்தலைவர் , உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் ஜெயசக்திவேல் நன்றி கூறினார்.

Tags:    

Similar News