உள்ளூர் செய்திகள்

கோவையில் அரசு டாக்டர் வீட்டில் நகைகள் கொள்ளை

Published On 2023-11-05 14:37 IST   |   Update On 2023-11-05 14:37:00 IST
  • வீடு புகுந்து தங்க நாணயம், வெள்ளி பொருட்களை அள்ளி சென்றனர்
  • வடவள்ளி போலீசார் விசாரணை

 வடவள்ளி,

கோவை வடவள்ளி, ராமசாமி நகர் நேரு தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 33). இவர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை பார்த்துவருகிறார்.

இந்த நிலையில் அவர் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் சென்னைக்கு புறப்பட்டூ சென்றார்.

அப்போது யாரோ மர்மநபர்கள் முன்கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பூஜை அறை மற்றும் பீரோவில் இருந்த தங்க நாணயம், வெள்ளி நகை உள்பட ரூ.55 ஆயிரம் மதிப்புடைய பொருட்களை கொள்ளை அடித்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News