உள்ளூர் செய்திகள்

சிங்காநல்லூர் அருகே அம்மன் கோவிலில் நகைகள் கொள்ளை

Published On 2022-07-23 10:11 GMT   |   Update On 2022-07-23 10:11 GMT
  • கோவிலில் வரதராஜபுரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜன் என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார்.
  • நான்கே முக்கால் பவுன் நகையையும், வெள்ளி பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

கோவை:

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள மசக்காளி பாளையத்தில் ஸ்ரீஏகசக்தி ரங்கநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வரதராஜபுரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜன் என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார்.

சம்பவத்தன்று பூஜைகள் முடிந்து அவர் கோவிலை பூட்டி விட்டுச் சென்றனர். நள்ளிரவில் கோவிலில் மர்ம நபர்கள் புகுந்து அங்கிருந்த அம்மனுக்கு அணிவிக்கப்படும் கம்மல், மூக்குத்தி, நெக்லஸ் உள்ளிட்ட நான்கே முக்கால் பவுன் நகையையும், வெள்ளி பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றனர். தப்பிச்செல்லும் போது அவர்கள் கோவிலில் இருந்து கியாஸ் சிலிண்டரையும் எடுத்துச் சென்றனர்.

இதுகுறித்து சிங்கா நல்லூர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பகுதியில் கண்காணிப்பு காமிரா எதுவும் உள்ளதா என்பது பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். 

Tags:    

Similar News