உள்ளூர் செய்திகள்

பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2022-08-07 08:01 GMT   |   Update On 2022-08-07 08:01 GMT
  • கடலூர் அருகே பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
  • இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

கடலூர்:

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கீழ்பாகு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சகுந்தலா (வயது 55). சம்பவத்தன்று இவர் சிதம்பரம் பஸ் நிலையம் எதிரில் உள்ள கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட சென்றார். அப்போது அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை மர்ம மனிதர்கள் பறித்துச் சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இது குறித்து சகுந்தலா, சிதம்பரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News