உள்ளூர் செய்திகள்

ஜல்லிப்பட்டி உச்சி மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2023-01-28 06:45 GMT   |   Update On 2023-01-28 06:45 GMT
  • கும்பாபிஷேக விழா கடந்த செவ்வாயன்று தீர்த்தம், முளைப்பாரி எடுத்து வருதலுடன் தொடங்கியது.
  • நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உடுமலை :

உடுமலையையடுத்த முக்கூடு ஜல்லிபட்டியில் சக்தி வாய்ந்த உச்சி மாகாளியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த செவ்வாயன்று தீர்த்தம், முளைப்பாரி எடுத்து வருதலுடன் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக தேவதா அனுக்ஞை, கோ பூஜை உள்ளிட்ட நிகழ்வுகளை தொடர்ந்து நேற்று காலை 4 ம் கால யாக பூஜை, நாடி சந்தானம், பிம்ப சுத்தி, மஹா பூர்ணாகுதி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் காலை 9.30மணிக்கு மேல் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து உச்சி மாகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News