உள்ளூர் செய்திகள்

நிச்சயம் ஸ்ரீஹரிகோட்டா செல்வேன் - இஸ்ரோ தலைவரை சந்தித்தபின் பிரக்ஞானந்தா பேட்டி

Published On 2023-10-16 05:08 GMT   |   Update On 2023-10-16 07:23 GMT
  • இஸ்ரோ தலைவர் சோமநாத், பிரக்ஞானந்தா வீட்டுக்கு சென்று நினைவுப் பரிசு வழங்கினார்.
  • பிரக்ஞானந்தா சாதனைக்காக மிகவும் பெருமைப்படுகிறோம் என்றார்.

சென்னை:

இஸ்ரோ தலைவர் சோமநாத் இன்று சென்னை வந்துள்ளார். அவர், சென்னையில் உள்ள செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வீட்டுக்கு சென்றார். அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி மகிழ்ந்தார்.

இது குறித்து பிரக்ஞானந்தா கூறுகையில், இஸ்ரோ தலைவர் சோமநாத்தை சந்திப்பதில் பெருமிதம் கொள்கிறேன். சந்திரயான் 3 புறப்பட்டு தரையிறங்குவதைப் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. எனது பயணம் மற்றும் பயிற்சி குறித்து விவாதித்தோம். ராக்கெட்டுகள் தயாரிக்கப்படும் திருவனந்தபுரத்திற்கும், ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் வருமாறு என்னை அவர் அழைத்துள்ளார். எனவே, நான் நிச்சயமாக அங்கு செல்வேன் என கூறினார்.

இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறுகையில், ஒவ்வொரு இந்தியரைப் போலவே, நாமும் பிரக்ஞானந்தா சாதனைக்காக மிகவும் பெருமைப்படுகிறோம்.

செஸ் என்பது இந்தியாவில் தொடங்கப்பட்ட ஒரு பழைய விளையாட்டு. நாம்தான் அதன் பிறப்பிடம். இது மனமும் புத்திசாலித்தனமும் கொண்ட விளையாட்டு.

நிலவில் பிரக்ஞன் இருக்கிறான் என்று பெருமை கொள்கிறோம், பூமியில் இந்த பிரக்ஞன் இருக்கிறான்.

நிலவில் இந்தியாவுக்கு நாம் என்ன செய்தோமோ அதை அவர் நிலத்தில் சாதித்திருக்கிறார். விண்வெளியை மேம்படுத்த எங்களுடன் இணைந்து பணியாற்றப் போகிறார்.

அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் இந்தியாவை ஒரு சக்திவாய்ந்த நாடாக மாற்ற இளைஞர்களை ஊக்குவிப்பதில் எங்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளார் என தெரிவித்தார்.

Tags:    

Similar News