உள்ளூர் செய்திகள்

வாலிபரை உல்லாசத்திற்கு அழைத்த பெண் உள்பட 2 பேர் கைது

Published On 2022-07-26 10:09 GMT   |   Update On 2022-07-26 10:09 GMT
  • பட்டீஸ்வரன் ( வயது 30). இவர் மோட்டார் சைக்கிள் ஷோரூம் ஒன்றில் மார்க்கெட்டிங் பிரிவில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
  • வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார் எருமாபாளையம் பால்காரர் தெரு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (32), ரம்யா (31) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

அன்னதானப்பட்டி:

சேலம் சூரமங்கலம் ஜாகீர் அம்மாபாளையம் வீரபாண்டியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பட்டீஸ்வரன் ( வயது 30). இவர் மோட்டார் சைக்கிள் ஷோரூம் ஒன்றில் மார்க்கெட்டிங் பிரிவில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இவர் தாதகாப்பட்டி பில்லுக்கடை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அருகே ஒரு வேலை விஷயமாக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சிலர் பட்டீஸ்வரனிடம் தனியாக அழைத்து பேச்சு கொடுத்து , தங்களிடம் அழகான இளம்பெண்கள் இருப்பதாகவும் , ரூ.2000 கொடுத்தால் அவர்களுடன் ஜாலியாக உல்லாசம் அனுபவிக்கலாம் என்றும் கூறி அவரை விபசாரத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து பட்டீஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார் எருமாபாளையம் பால்காரர் தெரு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (32), ரம்யா (31) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News