உள்ளூர் செய்திகள்

சிவகிரி வாலிபர் கொலையில் 15 பேரிடம் தொடரும் விசாரணை

Published On 2023-03-15 13:59 IST   |   Update On 2023-03-15 14:28:00 IST
  • கடந்த 13-ந்தேதி செல்வக்குமார் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
  • பழிக்குப்பழியாக சிவக்குமாரின் நண்பர்கள் இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

சிவகிரி:

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணம் காமராஜர் காலனியை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 40).

கொலை

இவர் கடந்த ஆண்டு சிவக்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் கடந்த 11-ந்தேதி ஜாமீனில் வெளிவந்த நிலையில், கடந்த 13-ந்தேதி மர்மகும்பலால் செல்வக்குமார் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

15 பேரிடம் விசாரணை நீடிப்பு

விசாரணையில் சிவக்குமார் கொலை செய்யப்பட்டதில் பழிக்குப்பழியாக அவரது நண்பர்கள் இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தி யிருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் தலைமையிலான போலீசார் 15 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News