உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் சர்வதேச பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி

Published On 2022-10-12 14:28 IST   |   Update On 2022-10-12 14:28:00 IST
  • உதகை ஜெ.எஸ்.பார்மசி கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்சி நடைபெற்றது.
  • பேரணியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஊட்டி

ஊட்டி மத்திய ரோட்டரி கிளப், நீலகிரி மேற்கு ரோட்டரி கிளப் சார்பில் சர்வதேச பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி ஊட்டி மத்திய ரோட்டரிகிளப் தலைவர் ஷெரிப் முகமது, செயலாளர் கவுரி பாபு, நீலகிரி மேற்கு ரோட்டரி கிளப் தலைவர் நிர்மலா சொக்கன், செயலாளர் ஆனந்தி, சந்திரன் ஆகியோர் ஏற்பாட்டில் உதகை ஜெ.எஸ்.பார்மசி கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்சி நடைபெற்றது.

இதில் நுகர்வோர் பிரச்சனை தீர்வு கமிசன் தலைவர் டி.சித்ரா, உளவியலாளர் ஆலோசனை குழு உறுப்பினர் பி.சுசிலா சுரேஷ்,உளவியல் ஆலோசனையாளர் ஹானா டிக்சன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முனைவர் பொன்னுசங்கர், முனைவர் வடிவேலன், முனைவர் பாபு ஆகியோர் நிகழ்வுகளை ஒருங்கினைத்தனர்.

இந்த பேரணியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News