உள்ளூர் செய்திகள்

பணியாளர்கள் ஆய்வு செய்த காட்சி


பாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரம்

Published On 2023-02-04 07:26 GMT   |   Update On 2023-02-04 07:26 GMT
  • பணையேறிப்பட்டி கிராமத்தில் டெங்கு தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
  • கிராமம் முழுவதும் புகை மருந்து அடிக்கப்பட்டு மருத்துவ முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

தென்காசி:

தென்காசி துணை இயக்குனர் சுகாதார பணிகள் டாக்டர் முரளி சங்கர் அறிவுறுத்தலின்படி தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகில் உள்ள அரியப்பபுரம் வெள்ளை பணையேறிப்பட்டி கிராமத்தில் டெங்கு தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று நல்ல தண்ணீரில் கொசுப்புழு உள்ளதா என்பதை ஆய்வு செய்தனர். கிராமம் முழுவதும் காய்ச்சல் நோயாளிகள் உள்ளார்களா என கணக்கெடுக்கப்பட்டது. கிராமம் முழுவதும் புகை மருந்து அடிக்கப்பட்டு மருத்துவ முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. கீழப்பாவூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார், டாக்டர் பாரதி கண்ணம்மா மாவட்ட தொற்று நோய் நிபுணர் டாக்டர் தண்டாயுதபாணி, மாவட்ட மலேரியா அலுவலர் குருநாதன், இளநிலை பூச்சிகள் வல்லுநர் பாலாஜி, வட்டார சுகாதாரமேற்பார்வையாளர் ஸ்ரீமுக நாதன், சுகாதார ஆய்வாளர் ஜெயராமன், சுப்ரமணியன் மற்றும் மஸ்தூர் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News