உள்ளூர் செய்திகள்

பள்ளி வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்திய காட்சி.

கோவில்பட்டியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு : குழந்தைகளின் பாதுகாப்பை டிரைவர், கண்டக்டர்கள் உறுதி செய்ய வேண்டும - வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவுறுத்தல்

Published On 2023-05-15 08:11 GMT   |   Update On 2023-05-15 08:11 GMT
  • ஆய்வின் போது பள்ளி வாகனங்களில் 16 வகையான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதா? என்பது குறித்து பரிசோதிக்கப்பட்டது.
  • பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலர், பள்ளி பஸ்களில் பயணம் செய்யும் குழந்தைகளின் பாதுகாப்பை டிரைவ், கண்டக்டர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

கோவில்பட்டி:

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி வாகனங்களை முழுமையாக ஆய்வு செய்து அவற்றின் பாதுகாப்பு அம்சங்களை பரிசோதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளி வாகனங்கள் ஆய்வு

அதன்படி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டையபுரம், கயத்தார் பகுதியில் உள்ள 40 பள்ளிகளில் 265 பள்ளிகளை சேர்ந்த 137 வாகனங்கள் கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலக மைதானத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன், ஆர்.டி.ஓ. மகாலெட்சுமி, தாசில்தார் வசந்தமல்லிகா, கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர், தீயணைப்பு நிலைய அதிகாரி சுந்தராஜ், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ் விஷ்வநாத் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளபட்டது.

பாதுகாப்பு அம்சங்கள்

ஆய்வின் போது பள்ளி வாகனங்களில் 16 வகையான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதா? என்பது குறித்து பரிசோதிக்கப்பட்டது. மேலும் கதவு, படிக்கட்டுகள், ஜன்னல், டிரைவர் கேபின், அவசர வழி, முதலுதவி பெட்டி, தொடர்பு எண்கள், நிறம், கண்காணிப்பு காமிரா, வேகக் கட்டுபாட்டு கருவி உள்ளிட்டவை முறையாக இடம் பெற்றுள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.

சில வாகனங்களில் குறைபாடு கண்டறியப்பட்டு உடனடியாக அதை சரி செய்து கொண்டு வரும்படி அறிவுறுத்தப்பட்டது. பின்னர் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் மத்தியில் பேசிய வட்டார போக்குவரத்து அலுவலர், பள்ளி பஸ்களில் பயணம் செய்யும் குழந்தைகளின் பாதுகாப்பை டிரைவ், கண்டக்டர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News