உள்ளூர் செய்திகள்
ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்திருப்பதால், சுற்றுவட்டார கிராம மக்களுக்கு, தாசில்தார் கவாஸ்கர் தலைமையில் வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தபோது எடுத்த படம்.
ஓசூர் பகுதியில் தொடர் மழை: ஏரியை பார்வையிடவும், செல்பி எடுக்கவும் தடை
- ஏரிக்கரை அருகே பொதுமக்கள் யாரும் செல்லக்கூடாது.
- ஏரிகளை பார்க்கவும், செல்பி எடுத்துக் கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.,
ஓசூர்,
ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் கே.பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஓசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஓசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏரிகளில் மழை நீர் நிரம்பி வருகிறது.
இந்த நிலையில், ஏரிகளை பார்க்கவும், செல்பி எடுத்துக் கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது., ஏரிக்கரை அருகே பொதுமக்கள் யாரும் செல்லக்கூடாது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.