உள்ளூர் செய்திகள்

பாலம் கட்டும் பணியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விழுப்புரம் நகராட்சி பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு

Published On 2022-07-29 08:18 GMT   |   Update On 2022-07-29 08:18 GMT
  • விழுப்புரம் நகராட்சி பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
  • தற்போது மழைக்காலமாக உள்ளதால், பணியினை விரைந்து முடிக்க வேண்டும்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சியில், நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துறையின் சார்பில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டும்பணி நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தற்போது மழைக்காலமாக உள்ளதால், பணியினை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், இது நகரின் முக்கிய பகுதியாக உள்ளதால் பொதுமக்களுக்கு சிரமமின்றி பணியை விரைந்து முடித்து, சாலையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்கள் விரைந்து பணியினை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் விழுப்புரம் 4 வழிச்சாலை பகுதியிலிருந்து வரக்கூடிய மழைநீர் ஆங்காங்கே தேங்கி நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்குவதை கண்டறிந்து அதை சீர் செய்திடும் வகையில் விழுப்புரம் நெடுஞ்சாலை கட்டுமானம் (ம) பராமரிப்புத்துறையின் மூலம் 2021-2022-ஆம் நிதியாண்டில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ், விழுப்புரம் நகரம் வழியாக செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு மேம்பாடு செய்தல் மற்றும் பாக்ஸ் கல்வெட்டு புதிதாக கட்டுதல் என ரூ.4.30 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டு, தற்பொழுது புதிய பஸ் நிலையம் அருகே, புதிய பாலம் கட்டப்படுகின்றன. அதனை தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலையில் 2 பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால் கட்டும்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணி முடிவுற்றவுடன், மழைநீர் தேங்காமல் வடிகால் வாய்க்கால்களில் தண்ணீர் சென்று விடுகின்ற வகையில் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் சிவசேனா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பரிதி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் தன்ராஜ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஷோபனா, உதவி பொறியாளர்கள் வசந்தபிரியா, அய்யனார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News