உள்ளூர் செய்திகள்
தஞ்சையில், தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி- கலெக்டர் தொடங்கி வைத்தார்
- பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஏராளமான மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.
- வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தஞ்சாவூர்:
தஞ்சை ரயிலடியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் நடந்த பேரணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஏராளமான மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு வாக்களிப்பது ஜனநாயக கடமை, நிச்சயமாக வாக்களிப்பேன் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.
மேலும் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.