உள்ளூர் செய்திகள்

குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சையில், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-01-20 15:35 IST   |   Update On 2023-01-20 15:35:00 IST
  • தொடர்ந்து 50 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு.
  • திருமண்டங்குடி சர்க்கரை ஆலை பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி கோஷம்.

தஞ்சாவூர்:

தஞ்சை வருவாய் கோ ட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கோட்டாட்சியர் ரஞ்சித் தலைமை தாங்கினார். இதில் கோட்ட அளவிலான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் செந்தில்குமார், செயலாளர் என்.வி.கண்ணன், கக்கரை சுகுமாரன், கோவிந்தராஜன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் அவர்கள் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திருமண்டங்குடி சர்க்கரை ஆலை பழைய ,புதிய நிர்வாகங்களை கண்டித்து தொடர்ந்து 50 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், உடனடியாக தமிழக அரசு தலையிட்டு திருமண்டங்குடி சர்க்கரை ஆலை பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தால் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News