உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள்.

சீர்காழியில், மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-10-15 09:43 GMT   |   Update On 2023-10-15 09:43 GMT
  • ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யாத மின் வாரியத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
  • மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

சீர்காழி:

சீர்காழி தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளாயீஸ் ஃபெடரேஷன் சார்பில் ஆள் பற்றாக்கு றையை போக்க ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யாத மின்சார வாரியத்தை கண்டித்தும், கூடுதல் பணி செய்ய நிர்பந்திக்கும் சீர்காழி மின்சார வாரிய அதிகாரிகளை கண்டித்தும், மின் விபத்து மற்றும் உயிரிழப்பு களை தடுக்க தவறிய மின்சார வாரிய அதிகாரிகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோட்ட செயலாளர் ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்ட் எம்பிளாய்ஸ் பெடரேஷன் மாநிலத் துணைத் தலைவரும், நாகை மின் திட்ட தலைவருமான செல்வராஜ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

இதில் நூற்றுக்கு மேற்பட்ட மின்சார வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News