உள்ளூர் செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 163 மாணவிகள் தேர்வு

Published On 2022-09-06 15:37 IST   |   Update On 2022-09-06 15:37:00 IST
  • துமைப்பெண் திட்டப் பைகளுடன் வங்கிப் பற்று அட்டைகளை வழங்கினாா்.
  • அவசர உதவி எண் கொண்ட புகாா் பெட்டியினை திறந்துவைத்தாா்.

 ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டம் தொடக்க விழா நடந்தது. ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வனத் துறை அமைச்சா் ராமசந்திரன் பங்கேற்று 163 கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டப் பைகளுடன் வங்கிப் பற்று அட்டைகளை வழங்கினாா். மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதா வது:-

அரசுப் பள்ளிகளில் பயின்று உயா் கல்வி படித்து வரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளாா்.

நீலகிரி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 163 கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தினை கல்லூரி மாணவிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் புதுமைப்பெண் திட்டத்தில் சிறந்த 24 பங்காளிப்பாளா்களுக்கு விருதினை வழங்கிய பின்னா், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்கொடுமையினை தடுத்து நிறுத்துவதற்கான அவசர உதவி எண் கொண்ட புகாா் பெட்டியினையும் திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயராமன், மகளிா் திட்ட இயக்குநா் ஜாகீா் உசேன், மாநில மகளிா் ஆணைய உறுப்பினா் கீதா நடராஜன், மாவட்ட ஊராட்சித் தலைவா் பொன்தோஸ், ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் மனோகரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சத்யராஜா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் தேவகுமாரி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் இப்ராகிம்ஷா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் தாமோதரன், மாவட்ட சமூக நல அலுவலா் பிரவீணா தேவி உள்பட பலா் கலந்து கொண்டனா். 

Tags:    

Similar News