உள்ளூர் செய்திகள்

நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதிகளில் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் சசிகலா குளங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார் அருகில் நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், கமிஷனர் (பொறுப்பு )மகேஸ்வரி உள்ளனர்.

நெல்லிக்குப்பம் நகராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு

Published On 2023-04-22 09:26 GMT   |   Update On 2023-04-22 09:26 GMT
  • நிர்வாக இயக்குனர் சசிகலா இன்று காலை நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
  • பணிகளை விரைந்து முடித்து பயன் பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தி னார்.

கடலூர்:

நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்வ தற்காக செங்கல்பட்டு மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் சசிகலா இன்று காலை நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது நெல்லிக் குப்பம் பகுதியில் 6 குளங்கள் தூர்வாரப்படும் பணிகள், ஜம்புலிங்க பூங்காவில் காலை சிற்றுண்டி செய்வதற்கு புதிய கட்டிடம் கட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வரு வதை நகராட்சி நிர்வாக இயக்குனர் சசிகலா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அனைத்து பணிகளும் அரசு விதிக்கப்பட்ட உத்தரவு படியும், அந்தந்த காலக்கட் டத்திற்குள் பணிகளை விரைந்து முடித்து பயன் பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தி னார். அப்போது நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) மகேஸ்வரி, பொறியாளர் பாண்டு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News