உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் தொண்டு நிறுவன தலைவரிடம் பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது

Published On 2022-11-17 15:17 IST   |   Update On 2022-11-17 15:17:00 IST
  • நேற்று மர்ம நபர்கள் 3 பேர் ஊழலுக்கு எதிராக பொதுகூட்டம் நடத்த வேண்டும் என கேட்டுள்ளனர்.
  • பணம் எதுவும் தரமுடியாது என்று கூறியுள்ளதால் அவர்கள் மிரட்டியுள்ளனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி கோப்ரட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது46). இவர் தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று மர்ம நபர்கள் 3 பேர் ஊழலுக்கு எதிராக பொதுகூட்டம் நடத்த வேண்டும். அதனால் பணம் தாருங்கள் என்று கேட்டுள்ளனர். இதற்கு அவர் பணம் எதுவும் தரமுடியாது என்று கூறியுள்ளதால் அவர்கள் மிரட்டியுள்ளனர்.

இது குறித்து கோபிநாத் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் தருமபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாய் பகுதியை சேர்ந்த மாணிக்கம், வெண்ணாம்பட்டியை சேர்ந்த இளங்கோவன், சோகத்தூரை சேர்ந்த மாதவன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இவர்கள் இதே போல் சூளகிரியில் உள்ள ஒரு லாட்ஜ்க்கு சென்று அங்கும் பணம் கேட்டு மிரட்டியுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

Tags:    

Similar News