உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் இந்தி திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் -மதியழகன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது

Published On 2022-10-16 13:31 IST   |   Update On 2022-10-16 13:31:00 IST
  • மதியழகன் எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • தமிழ் மொழிக்கு ஒரு பிரச்சினை என்றால் தி.மு.க. தொடர்ந்து போராடும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் இந்தி திணிப்பை எதிர்த்து கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், கிழக்கு மாவட்ட தி.மு.க .இளைஞர்அணி மற்றும் மாணவர் அணி சார்பில் இந்தி திணிப்பையும், ஒரே நுழைவுத் தேர்வையும் திரும்ப பெற ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ரஜினிசெல்வம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் நவாப் வரவேற்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. தலைமை வகித்து, கண்டனவுரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ் ஒரு தொன்மையான மொழியாகும். நமது தமிழ் மொழிக்கு எப்போதெல்லாம் சோதனைகள் வருகிறதோ, இந்தியை திணிக்க முயற்சி செய்கிறார்களோ அப்போதெல்லாம் தி.மு.க. தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறது. இதுவரை 2 முறை நாம் இந்தி எதிர்ப்பு போராட்டங்களை கண்டுள்ளோம். மத்தியில் ஆளும் பா.ஜ அரசால் மக்கள் சொல்லொண்ணா துயரங்களை சந்தித்து வருகிறார்கள். கடந்த 10 வருடத்தில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது, விலைவாசி உயர்வு, கியாஸ் விலை உயர்வு என மக்களை வாட்டி வதைத்துள்ளனர்.

இன்று இந்தியை திணிக்க முயற்சி செய்கிறார்கள். தமிழ் மொழிக்கு ஒரு பிரச்சினை என்றால் தி.மு.க. தொடர்ந்து போராடும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான செங்குட்டுவன், முன்னாள் எம்.பி. சுகவனம் பங்கேற்று பேசினர். இதில், மாநில மகளிர் அணி தலைவர் டாக்டர்.காஞ்சனா கமலநாதன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாவட்ட அவைத்தலைவர் தட்டரஅள்ளி நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசுமூர்த்தி, சந்திரன், மாவட்ட பொருளாளர் கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினரும், நகர்மன்ற தலைவருமான பரிதாநவாப், பொதுக்குழு உறுப்பினர்கள் அஸ்லாம், பாலன், சாமிநாதன், நாகராசன், கோதண்டன், சித்ரா சந்திரசேகர், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அறிஞர், கோவிந்தன், தனசேகரன், குமரேசன், செல்வராஜ், வசந்தரசு, நரசிம்மன், சாந்தமூர்த்தி, மகேந்திரன், சுப்பிரமணி, பேரூர் செயலாளர்கள் தம்பிதுரை, பாபு, வெங்கட்டப்பன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டு, மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். 

Tags:    

Similar News