உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க.ஆர்ப்பாட்டம்
- பால் விலை, மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
- நகர செயலாளர் கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சொத்து வரி, பால் விலை, மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலை அரசு மகளிர் கல்லூரி பஸ் நிறுத்தம் அருகில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் சொத்து வரி, மின் கட்டண உயர்வை, பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், கண்ணியப்பன், பொதுக்குழு உறுப்பினர்கள் சதீஷ்குமார், இந்திராணி மகாதேவன், ஒன்றிய குழு தலைவர் அம்சாராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, நகர செயலாளர் கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அமீர்ஜான் நன்றி கூறினார்.