உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்ற 3 பேர் கைது குட்காவுடன் 2 பேர் சிக்கினர்

Published On 2022-10-22 09:28 GMT   |   Update On 2022-10-22 09:28 GMT
  • 12.5 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.12,200 ஆகும்.
  • 300 கிராம் கஞ்சா மற்றும் ஒரு மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கஞ்சா, தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெறுகிறதா? என கண்காணிக்க போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டார்.

அதன் பேரில் போலீசார் சோதனை நடத்தினார்கள். இதில் ஓசூர் பஸ் நிலையத்தில் குட்காவுடன் நின்று கொண்டிருந்த திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா பாளையம் கிராமத்தைச் சேர்ந்த செல்லபாண்டி (23) ஜெகன் (41) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12.5 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.12,200 ஆகும்.

அதே போல கஞ்சா விற்ற கிருஷ்ணகிரி துவாரகாபுரி ஸ்ரீகாந்த் (23), திருவள்ளுவர் நகர் லோகேஷ் (27), பர்கூர் வரமலைகுண்டா பப்போடா (48), தளி பஸ் நிலையம் அருகில் கஞ்சா விற்ற பெங்களூரு முனீஸ்வர் நகர் ஷேக் (32) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சா மற்றும் ஒரு மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News