உள்ளூர் செய்திகள்
ஓசூரில் கஞ்சா வைத்திருந்த ஓடிசா வாலிபர் கைது
- அந்த வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்தனர்.
- கஞ்சா வைத்திருந்த ஓடிசா மாநிலம், குறிகுடா பகுதியை சேர்ந்த நோயல் பெடரிடா (வயது25) என்பவரை போலீசார் கைது செய்தனர்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட 800 கிராம் கஞ்சா வைத்திருந்த ஓடிசா மாநிலம், குறிகுடா பகுதியை சேர்ந்த நோயல் பெடரிடா (வயது25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்யப்பட்டது.