உள்ளூர் செய்திகள்

ஓசூரில் 162 கிலோ குட்கா கடத்திய வாகனம் பறிமுதல்

Published On 2022-12-09 15:51 IST   |   Update On 2022-12-09 15:51:00 IST
  • வாகனத்தை சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட 162 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
  • குட்கா கடத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடியில் சிப்காட் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை போலீசார் மறித்தனர். வண்டியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பியோடிவிட்டார்.

வாகனத்தை சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட 162 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதன்மதிப்பு ரூ.1 லட்சத்து 74 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர். தப்பியோடி டிரைவர் கர்நாடகா மாநிலம், கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த நிஜாம் (வயது38) என்பது தெரியவந்தது. குட்கா கடத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News