உள்ளூர் செய்திகள்
ஓசூரில் கடையில் செல்போன் திருடிய வாலிபர் கைது
- கடையில் இருந்த 6 செல்போன்களை மர்ம நபர் ஒருவர் திருடிவிட்டு சென்றுள்ளார்.
- செல்போன் திருடியதாக சானசந்திரம் பகுதியை சேர்ந்த அப்பு (20) என்பவரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜாபர்தெருவை சேர்ந்தவர் ஜாபர்உேஷன் (வயது29). இவர் தாலுகா அலுவலகம் சாலையில் செல்போன் கடை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று கடையில் இருந்த 6 செல்போன்களை மர்ம நபர் ஒருவர் திருடிவிட்டு சென்றுள்ளார்.
இது குறித்து அவர் ஓசூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் செல்போன் திருடியதாக சானசந்திரம் பகுதியை சேர்ந்த அப்பு (20) என்பவரை கைது செய்தனர்.