குருவிநாயனப்பள்ளியில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாம்
- ஒவ்வொரு தாலுகாவில் ஒரு கிராமத்தில் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
- மொத்தம் 57 மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளைக் களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நேற்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஒவ்வொரு தாலுகாவில் ஒரு கிராமத்தில் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலூகா வரட்டனப்பள்ளி அடுத்த குருவிநாயனப்பள்ளி கிராமத்தில் நடந்த பொது விநியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் குடிமை பொருள் வட்ட வழங்கல் வட்டாட்சியர் அல்லாபகஷ் பாஷா, வட்ட பொறியாளர் சரவணன், வருவாய் ஆய்வாளர் சின்னசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு அந்தப் பகுதியில் மக்களின் ரேஷன் கார்டில் புதியதாக உறுப்பினர் சேர்க்கை, உறுப்பினர் நீக்கம், தொலைபேசி எண், முகவரி மாற்றம் என மொத்தம் 57 மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.