உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே வெவ்வேறு சம்பவங்களில் ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 2 பேர் தூக்கில் தொங்கி தற்கொலை

Published On 2022-10-12 15:16 IST   |   Update On 2022-10-12 15:16:00 IST
  • மனம் உடைந்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
  • குடியால் ஏற்பட்ட குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியை சேர்ந்த மூக்கண்டப்பள்ளி காந்திநகரில் வசித்து வந்தவர் செல்வம் (வயது 38).ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அதனால் மனைவியுடன் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும். இதேபோல நேற்று ஏற்பட்ட தகராறில் செல்வம் மனம் உடைந்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதேபோல கிருஷ்ணகிரி டவுன் பழையபேட்டை பகுதியை சேர்ந்த அருண்குமார் (29) என்ற கட்டிட மேஸ்திரியும் குடியால் ஏற்பட்ட குடும்ப தகராறில் மனம் உடைந்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News