உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்க வாய்ப்பு

Published On 2022-12-03 09:04 GMT   |   Update On 2022-12-03 09:04 GMT
தகுதி வாய்ந்த நபர்கள் தமிழக அரசின் இணையதளத்தில் 10.12.2022க்குள் பதிவு செய்ய வேண்டும்.

கடலூர்:

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 2023 ஆம் ஆண்டில் உலக மகளிர் தினத்தன்று அவ்வையார் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு தமிழக முதலமைச்சர் 8 கிராம் தங்கபதக்கமும், 1 லட்சத்திற்கான காசோலை, சான்று மற்றும் சால்வை ஆகியவைகள் வழங்கப்படுகிறது. இவ்விருது பெறுவதற்கு தகுதி வாய்ந்த நபர்கள் தமிழக அரசின் இணையதளத்தில் 10.12.2022க்குள் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் தமிழ் நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும் 18 வயதிற்கு மேற்பட்ட வராகவும் இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூகநலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண்

குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் மொழி, இனம், பண்பாடு, கலை அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்காக தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணிபுரிபவர்களாக இருத்தல் வேண்டு ம். தேசிய மற்றும் உலகளாவிய விருதுகளின் விவரம் (விருது பெற்றிருப்பின் அதன் விவரம், விருதின் பெயர், யாரிடமிருந்து பெற்றது பெற்ற வருடம் தெரிவிக்க வேண்டும். சேவை பற்றிய செயல்முறை விளக்கம் புகைப்படங்கள் மற்றும் விரிவான அறிக்கை தெரிவிக்க வேண்டும். சமூக சேவையாளரின் சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விபரங்கள் தெரிவிக்க வேண்டும்.

சமூகப் பணியாளர் இருப்பிடத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று.

விண்ணப்பதாரர் சமர்ப்பிக்கும் கருத்துரு க்களில் பெண்களின் முன்னேற்றத்திற்கான சேவை புரிந்த விவரங்களை ஒரு பக்க அளவில் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் பாலசுப்பிரமணியம் விடு த்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

Tags:    

Similar News