உள்ளூர் செய்திகள்

கடலூர் குண்டு உப்பலவாடி பத்மாவதி நகரில் வீடு வீடாக சென்று தரம் பிரித்து வைக்கப்பட்டு இருந்த மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை சேகரிக்கும் பணியை மாநகர மேயர் சுந்தரி ராஜா தொடங்கி வைத்தார். அருகில் துணை மேயர் தாமரைச்செல்வன் நகர தி.மு.க. செயலாளர் ராஜா உள்ளார்.

கடலூர் மாநகராட்சியில் வீடு வீடாக மக்கும் குப்பையை பிரித்து வாங்கும் பணி: மேயர் சுந்தரி ராஜா தொடங்கி வைத்தார்

Published On 2022-06-25 09:58 GMT   |   Update On 2022-06-25 14:02 GMT
  • வீடு வீடாக மக்கும் குப்பையை பிரித்து வாங்கும் பணியை கடலூர் மாநகராட்சியில் மேயர் சுந்தரி ராஜா தொடங்கி வைத்தார்.
  • ஊழியர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டு துண்டு பிரசுரம் வழங்கினர்.

கடலூர்: 

கடலூர் மாநகராட்சி சார்பில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் என் நகரம் என் பெருமை எனது குப்பை எனது பொறுப்பு மற்றும் குப்பை தரம் பிரித்து பொதுமக்கள் கொடுப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் கடலூரில் நடைபெற்றது. இதற்கு மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி கடலூர் குண்டு உப்பலவாடி பத்மாவதி நகரில் வீடு வீடாக சென்று தரம் பிரித்து வைக்கப்பட்டு இருந்த மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை சேகரிக்கும் பணியை மேயர் தொடங்கி வைத்தார். முன்னதாக கடலூர் உழவர் சந்தையில் சுந்தரி ராஜா தலைமையில் துணைமேயர் தாமரைச்செல்வன், நகர்நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி முன்னிலையில் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஊழியர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டு துண்டு பிரசுரம் வழங்கினர்.

மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, மாணவரணி பாலாஜி, வேளாண்மை துணை இயக்குனர் பூங்கோதை, உழவர் சந்தை வேளாண்மை அலுவலர் மகாதேவன், மண்டலத் தலைவர் இளையராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் சசிகலா ஜெயசீலன், அருள்பாபு, சுபாஷ்ணிராஜா, கவிதாரகு, பாலசுந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர் ‌.

Tags:    

Similar News