உள்ளூர் செய்திகள்

குன்னூரில் கழிவறைக்குள் புகுந்த கரடி

Published On 2022-09-07 10:02 GMT   |   Update On 2022-09-07 10:02 GMT
  • பொதுமக்கள் கூடியதால் தப்பிச்சென்றது.
  • வனப்பகுதியில் இருந்து வெளியேறி நகரப் பகுதிக்கு வந்து செல்வது வழக்கமாகி உள்ளது.

குன்னூர், -

குன்னூர் நகர பகுதியான ராஜாஜி நகர் 25-வது வார்டு பகுதியில் அய்யப்பன் கோவில் செல்லும் சாலையின் அருகே பயன்படுத்தப்படாத கழிவறை உள்ளது.

இது முட்புதர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் அந்த சாலையின் வழியாக கரடி ஒன்று நடந்து வருவதை பார்த்த பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். அங்கிருந்தவர்கள் உடனடி யாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் .

வனத்துறையினர் அந்தப் பகுதிக்கு வந்து ஆய்வு செய்து கரடி எங்கு உள்ளது என்று தேடினர். அந்தப் பகுதியில் சாலையின் ஓரங்களில் உணவுப்பண்டங்களை கொட்டி உள்ள நிலையில் இந்த உணவுகளை சாப்பிடுவதற்காக கரடிகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி நகரப் பகுதிக்கு வந்து செல்வது வழக்கமாகி உள்ளது.

பொதுமக்களின் கூச்சல் சத்தத்தை கேட்ட கரடி அந்தப் பகுதியில் இருந்த பயன்படுத்தப்படாத கழிவறைக்குள் சென்று மறைந்தது. கரடி மறைந்த இடத்தை வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதியில் சுற்றி தேடிப்பார்த்தனர். ஆனால் கரடி அந்த இடத்தை விட்டு வேறொரு இடத்துக்கு சென்று விட்டது.

கரடி கழிவறைக்குள் புகுந்த தகவல் அறிந்த ஏராளமானோர் அங்கு கூடி நின்றனர். பின்னர் போலீசார் அவர்களை அங்கிருந்து புறப்பட்டுச் செல்லுமாறு கூறி அப்புறப்படுத்தினர்.   

Tags:    

Similar News