உள்ளூர் செய்திகள்

குன்னூரில் கட்டுமான தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டம்

Published On 2022-09-27 10:12 GMT   |   Update On 2022-09-27 10:12 GMT
  • கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
  • மாவட்ட தலைவர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது

ஊட்டி,

குன்னூரில் அகில இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது

மாவட்ட செயலாளர் முருகன் மூன்னிலை வகித்தார் பொருளாளர் பிராகரன், துணை தலைவர் சிவச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளராக மாநில அமைப்பு செயலாளர் ராயப்பன் கலந்து கொண்டார். குன்னூர் நகர தலைவர் சிவகுமார் வரவேற்றார். செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

அனைத்து தொழிலா ளர்களுக்கும் தாமதம் இன்றி சங்கத்தில் பதிவு செய்யவும் அனைத்து தகுதியான உண்மையான தொழிலாளர்கள் மட்டும் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும், அவர்கள் பாதிக்க ப்படும் போது உடனடியாக நிவாரணம் கிடைக்க அரசு நடவடிக்கை வேண்டும் என தீர்மானங்கள் நிறைவே ற்றபட்டது.

மாவட்ட தலைவர் கார்த்திக், கட்டுமான தொழிலா ளர்கள் பணியின் போது பாதுகாப்பாகவும் , கவனமாகவும் விழிப்புணர்வுடனும் கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Tags:    

Similar News