உள்ளூர் செய்திகள்

கோவையில் வாலிபருடன் மது போதையில் உல்லாசமாக இருந்த பெண் தற்கொலை

Published On 2022-11-02 09:08 GMT   |   Update On 2022-11-02 09:08 GMT
  • கணவர் கண்டித்ததால் விபரீத முடிவை எடுத்தார்.
  • கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் பெண் வாலிபரை வீட்டிற்கு அழைத்து மது போதையில் உல்லாசமாக இருந்து வந்தார்

கோவை,

கோவை காட்டூரை சேர்ந்த 42 வயது பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் பெண்ணுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதன் பின்னர் அவருக்கு வாலிபர் ஒருவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.

கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் பெண் வாலிபரை வீட்டிற்கு அழைத்து மது போதையில் உல்லாசமாக இருந்து வந்தார்.இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த பெண் மது குடித்தார். அப்போது அவரது கணவர் வீட்டிற்கு வந்தார். அவர் தனது மனைவி மது குடிப்பதை பார்த்து ஆத்திரம் அடைந்து தகராறு செய்தார். அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து இளம்பெண்ணின் கணவர் கோபித்துக்கொண்டு வெளியே சென்றார்.

இதன்காரணமாக மன வேதனை அடைந்த பெண் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய கணவர் கதவை தட்டினார். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார்.

வீட்டிற்குள் தனது மனைவி தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

பின்னர் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News