உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் குறை தீர்க்கும் கூட்டத்தில்215 மனுக்கள் பெறப்பட்டன

Published On 2023-04-25 15:34 IST   |   Update On 2023-04-25 15:45:00 IST
  • சாலை வசதி, மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 215 மனுக்களை பெறப்பட்டன.
  • தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று வாராந்தி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் பொதுமக்கள் வழங்கிய வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவைப் பெட்டி, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 215 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, ஓசூர் சப் கலெக்டர் சரண்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News