போலீஸ் நிலையங்களில் பெண்கள் புகார் அளிக்க வந்தால் உடனடியாக தீர்வு காண வேண்டும் - எஸ்.பி.பாலாஜி சரவணன் உத்தரவு
- ஒரு சமுதாயம் நன்றாக இருக்க வேண்டுமென்றால் பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வேண்டும்.
- காவல்துறையினர் குழந்தைகளிடம் விசாரணையில் ஈடுபடும்போது அன்பாகவும், மதிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் எஸ்.பி. பேசினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கில் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற தலைப்பில் மாவட்ட காவல்துறையினருக்கான ஒருநாள் பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது.
இதனை மாவட்ட போலீஸ் எஸ்.பி. பாலாஜி சரவணன் குத்து விளக் கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றி பேசினார்.
அப்போது கூறுகையில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தை களுக்கு கற்பிப்போம்" என்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தையாக இருந்தாலும் அவர்களை நல்ல முறையில் வளர்ப்பது தாயின் கடமையாகும்.
ஒரு சமுதாயம் நன்றாக இருக்க வேண்டுமென்றால் பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை அனை வரும் உணர வேண்டும். அவ்வாறு ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பாட்டாலே நல்ல சமுதாயத்தை உரு வாக்க முடியும். பாலின பாகுபாடு கூடாது.
தற்போது சமுதாயத்தில் பல துறைகளில் பெண்கள் சாதித்து உயரிய பதவிகளில் உள்ளனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாது காப்பு குறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை யினர் மூலம் பொதுமக்கள், பள்ளி- கல்லூரி மாணவர் களிடையே தொடர்ந்து மாற்றத்தை தேடி என்ற விழிப்புணர்வு நிகழச்சி நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் பெண்கள் பாதிக் கப்பட்டு போலீஸ் நிலை யத்திற்கு புகார் அளிக்க வந்தால், அவர்களை காவல் துறையினராகிய நீங்கள் இன்முகத்துடன் வரவேற்று அவர்களுடைய குறைகளை கேட்டறிந்து சட்டப்படி தீர்த்து வைக்க உதவ வேண்டும்.
காவல்துறையினர் குழந்தைகளிடம் விசாரணை யில் ஈடு படும்போது அவர்களிடம் அன்பாகவும், மதிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும். காவல்துறையினர் பொது மக்களிடம் கனிவாகவும், பண்புடனும் நடந்து கொள்வது மிக முக்கியமான தாகும்.
எனவே காவல்துறை யினராகிய நீங்கள் இந்த பயிலரங்கத்தை பயன் படுத்திக் கொண்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றும் இதுசம்மந்தமாக சமூகநலன் மற்றும் உரிமைத் துறைக்கு எல்லாவித ஒத்துழைப்பையும் மாவட்ட காவல்துறை வழங்கும் என்றும் கூறினார்
அதனை தொடர்ந்து தூத்துக்குடி ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி ஷெலின் ஜார்ஜ், மாவட்ட காவல்துறையினருக்கு பெண்குழந்தைகள் பாது காப்பு குறித்தும், பெண் கல்வியினை ஊக்கு வித்தல், படிப்பை இடை நிறுத்திய பெண் குழந்தை களை கண்டறிந்து மீண்டும் கல்வி பயிலவும், ஊக்கு வித்து உதவுவது குறித்தும் எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநல அலுவலர் (பொறுப்பு) திலகா, ஒருங் கிணைந்த வளர்ச்சி திட்ட அலுவலர் சரஸ்வதி, வழிகாட்டி செயல் அலுவலர் வீரலெட்சுமி உட்பட உறுப்பினர்கள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.