உள்ளூர் செய்திகள்

வனவிலங்குகளை வேட்டையாடிய அல்லிமுத்துவை வனத்துறையினர் கைது செய்தனர்.

வனஉயிரினங்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

Published On 2023-08-06 15:45 IST   |   Update On 2023-08-06 15:45:00 IST
  • ஒரு வீட்டில் 2 உடும்புகள் (இதில் ஒன்று உயிரிழந்த நிலையிலும்), கீரி மற்றும் மான் கொம்புகளை கண்டுபிடித்தனர்.
  • வனஉயிரினங்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டால், வனச்சட்டங்களின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

குருபரப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள சிக்கிமேடு கிராம பகுதியில் ஓசூர் வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் ராஜமாரியப்பன், வனபாதுகாப்பு படை உதவி வனப்பாதுகாவலர் முனியப்பன், கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர்கள் ரவி, மூர்த்தி (வனபாதுகாப்பு படை) ஆகியோர் கொண்ட குழுவினர் மோப்ப நாய் உதவியுடன் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கிருந்த ஒரு வீட்டில் 2 உடும்புகள் (இதில் ஒன்று உயிரிழந்த நிலையிலும்), கீரி மற்றும் மான் கொம்புகளை கண்டுபிடித்தனர்.

இதுதொடர்பாக வன உயரின குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அதே கிராமத்தை சேர்ந்த அல்லிமுத்து (வயது45) என்பவரை கைது செய்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள கார்த்திக் என்பவரை தேடி வருகின்றனர். இந்த சோதனையின் போது குருபரப்பள்ளி இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசாரும் உடனிருந்தனர். வனத்துறையினர் கூறும்போது, வனஉயிரினங்கள் வேட்டையாடுதல் தடுக்கும் வகையில், சிக்கரிமேடு கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வனஉயிரினங்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டால், வனச்சட்டங்களின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

Tags:    

Similar News