உள்ளூர் செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டியளித்தார்.

தமிழக அரசை எதிர்த்து அ.தி.மு.க போராடினால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போட்டி போராட்டம் நடத்தும்- மாநில செயலாளர் பேட்டி

Published On 2022-08-09 09:04 GMT   |   Update On 2022-08-09 09:04 GMT
  • முல்லைப்பெரியார் அணையை திறந்ததால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
  • மின்சாரத்துறையை தனியார் மயமாக்கினால் ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசியபோது கூறியதாவது,

தமிழக அரசு முல்லைப் பெரியார் அணையை திறந்ததால் இங்குள்ள விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அ.தி.மு.க சட்டமன்ற துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசி வருவதை கண்டிக்கிறோம். அரசியல் ஆதாயத்திற்காக எதை வேண்டுமனாலும் பேசிவருகின்றனர். இதை மையப்படுத்தி அ.தி.மு.க போராட்டம் நடத்தினால், அதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தென்மாவட்டங்களில் போட்டி போராட்டாம் நடத்தும். தமிழகம் மற்றும் கேரளா ஆகிய 2 மாநில மக்களையும் தூண்டிவிட்டு கலவர சூழ்நிலையை உருவாக்குவது அரசியல் பிழைப்பு. மின்சாரத்துறையை தனியார் மயமாக்கினால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதுடன், ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News