உள்ளூர் செய்திகள்

3 ஆயிரம் பேரை தி.மு.க.வில் இணைப்பேன்

Published On 2022-12-20 09:37 GMT   |   Update On 2022-12-20 09:37 GMT
  • கோவை செல்வராஜ் சொல்கிறார்.
  • ஒருவர் காமிரா பையுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.

கோவை

சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. கோவை செல்வராஜ், கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

முதல்-அமை ச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து வரும் நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு அமைதியாக இருக்கிறது. தொடர்ந்து தமிழக அரசு மீது குறை கூறி வரும் பாரதீய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தைதடுக்க சட்டம் இயற்ற குரல் கொடுக்க தயாராக இருக்கிறாரா?, இந்த சூதாட்டம் காரணமாக ஏராளமான இளைஞர்கள் உயிரை மாய்த்து வருவதுடன் கடனுக்குள்ளாகி வருகி றார்கள். கொரோனா காலத்தில் வங்கியில் கடன் வாங்கியவர்கள் அதை செலுத்த முடியாமல் அவதியடை ந்தனர். ஆனால் அதற்கு வட்டி கூட தள்ளுபடி செய்யாத மத்திய அரசு, 540 தொழில் அதிபர்கள் செலுத்த வேண்டிய ரூ.12½ லட்சம் கோடி வாராக்கடனை தள்ளுபடி செய்து உள்ளது. இதை வைத்து பார்க்கும்போது மத்திய அரசு மக்களுக்கான அரசு இல்லை. தொழில் அதிபர்களுக்காக தான் இருக்கிறது. விரைவில் கோவையில் இருந்து 3 ஆயிரம் பேரை சென்னை அழைத்துச் சென்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைப்பேன். இவவாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News