சிதம்பரம் அருகே மது குடித்ததை மனைவி திட்டியதால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை
- சிதம்பரம் அருகே மது குடித்ததை மனைவி திட்டியதால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- கண்ணன் வீட்டிலிருந்த பணத்தை ராஜலட்சுமிக்கு தெரியாமல் எடுத்து மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
கடலூர்:
சிதம்பரம் மணவாளி அருகே அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 55) விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி (45). இந்நிலையில் முன்னதாக கண்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் கண்ணன் மனைவி ராஜலட்சுமியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அதற்கு ராஜலட்சுமி தர மறுத்துள்ளார். இதனையடுத்து கண்ணன் வீட்டிலிருந்த பணத்தை ராஜலட்சுமிக்கு தெரியாமல் எடுத்து மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
இதைபார்த்து ஆத்திரமடைந்த ராஜலட்சுமி கண்ணனை திட்டியுள்ளார். இதனால் மன உளச்சலில் இருந்த கண்ணன் தனது வீட்டின் பின்புறத்தில் இருந்த மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.