உள்ளூர் செய்திகள்

கோவையில் மனைவியை தாக்கிய கணவர்

Published On 2023-10-26 09:27 GMT   |   Update On 2023-10-26 09:27 GMT
  • சந்திரன் தினமும் குடித்து விட்டு வந்து தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
  • திருமணத்தின் போது வழங்கிய 40 பவுன் தங்க நகையை திரும்ப தர வேண்டும் என சரஸ்வதி கேட்டார்.

கோவை

கோவை இருகூர் அருகே உள்ள கே.ஜி.போஸ் நகரை சேர்ந்தவர் சந்திரன்(37). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும், சரஸ்வதி(33) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதற்கிடையே சந்திரன் தினமும் குடித்து விட்டு வந்து தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் சரஸ்வதி தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் சரஸ்வதி தனது உறவினர்களுடன் கணவர் வீட்டிற்கு சென்று, தனது பொருட்கள் மற்றும் திருமணத்தின் போது வரதட்சணையாக வழங்கப்பட்ட 40 பவுன் தங்க நகை மற்றும் 3 கிலோ வெள்ளி ஆகியவற்றை திரும்ப தர வேண்டும் என கேட்டார்.

அப்போது வீட்டில் இருந்த சந்திரன் மற்றும் அவரது தாயார் அம்சவேணி ஆகியோர் சரஸ்வதியை தகாத வார்த்தையால் பேசி தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் சந்திரனை கைது செய்தனர்.

இதேபோல், சந்திரனின் தாய் அம்சவேணி தன்னை சரஸ்வதி மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து தாக்கியதாக புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News