உள்ளூர் செய்திகள்

வேளாண் பல்கலைக்கழகத்தில் மனித சங்கிலி பேரணி

Published On 2023-06-05 15:28 IST   |   Update On 2023-06-05 15:28:00 IST
பொதுமக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

வடவள்ளி,

உலக சுற்றுச்சூழல் தினததை முன்னிட்டு கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இன்று மனித சங்கிலி நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பதிவாளர் தமிழ்வேந்தன் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறை தலைவர் பேராசிரியர் மகேஸ்வரி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்வின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News