உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் வீடு புகுந்து நகை திருட்டு

Published On 2023-04-22 08:16 GMT   |   Update On 2023-04-22 08:16 GMT
  • அன்னக்கிளியின் மகளின் கணவர் கடந்த 17-ந் தேதி வீட்டில் இருந்த துணிகள் எடுத்து வந்து மருத்துவமனையில் கொடுத்துள்ளார்.
  • அதன்பிறகு நேற்று அவரது மருமகன் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் பின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்து உள்ளது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி தாள முத்து நகரில் உள்ள கலைஞர் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் வடிவேல்.

மளிகை கடை

இவரது மனைவி அன்னக்கிளி (வயது 58). இவர் மாதாநகர் 5-வது தெருவில் வீட்டுடன் சேர்ந்து மளிகை கடை வைத்துள்ளார்.

இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி தனியாக குடியிருந்து வருகின்றனர்.

அவரது மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அன்னக்கிளி யின் மகளின் கணவர் கடந்த 17-ந் தேதி வீட்டில் இருந்த துணிகள் எடுத்து வந்து மருத்துவ மனையில் கொடுத்துள்ளார். அதன்பிறகு நேற்று அவரது மருமகன் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் பின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்து உள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப் பட்டு அதில் இருந்த சுமார் 3 பவுன் செயின், தங்க மோதிரம், செல்போன் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது.

இது குறித்து அவர் தாளமுத்து நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்- இன்ஸ் பெக்டர் முனிய சாமி வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து டி.எஸ்.பி. சத்யராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News