உள்ளூர் செய்திகள்

சங்கராபுரத்தில் இடி மின்னலுடன் பலத்த மழை

Published On 2023-03-20 09:53 GMT   |   Update On 2023-03-20 09:53 GMT
  • சங்கராபுரத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. நேற்று காலை முதல் மதியம் வரை சங்கராபுரம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிக மாக இருந்தது.
  • திடீரென கருமேகங்கள் திரண்டு சாரல் மழை பெய்ய தொடங்கி, பின்னர் இடி மின்னலுடன் கன மழையாக பெய்தது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. நேற்று காலை முதல் மதியம் வரை சங்கராபுரம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிக மாக இருந்தது. இந்த நிலை யில் சங்கராபுரம் பகுதியில் திடீரென கருமேகங்கள் திரண்டு சாரல் மழை பெய்ய தொடங்கி, பின்னர் இடி மின்னலுடன் கன மழையாக பெய்தது.

இதனால் சங்கராபுரம் பஸ் நிலையம், கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலை உள்ளிட்ட தாழ்வான பகுதி களில் தண்ணீர் பெருக்கெ டுத்து ஓடியது. திடீர் மழையால் பாதசாரிகள், மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். இதே போல் பகண்டை கூட்டு ரோடு, அரியலூர், வானபுரம், பகுதியிலும் இடி மின்னலுடன் கன மழை பெய்தது.

Tags:    

Similar News